search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் கால்டாக்சி நிறுவனம்"

    அண்ணாநகர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட 10-க்கும் மேற்பட்ட ‘பைக் டாக்சிகளை’ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    தனியார் கால்டாக்சி நிறுவனம் கார்களை போலவே ‘பைக் டாக்சி’ முறையையும் அறிமுகப்பத்தி உள்ளது.

    இதன் ஆப்பில் பைக் டாக்சியை புக் செய்தால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வந்து அவர்களை செல்ல வேண்டிய இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஊழியர்கள் அழைத்து செல்வர்.

    இந்த பைக் டாக்சி போக்குவரத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ‘பைக் டாக்சியாக இயங்கிய 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்ணா நகர் பகுதியில் ‘பைக் டாக்சி’ தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக அண்ணாநகர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தூர்வேல், செழியன், செண்பகவல்லி, நீலாவதி ஆகியோர் ‘பைக்டாக்சி’களை பறிமுதல் செய்ய அதிரடி திட்டம் வகுத்தனர்.

    அவர்கள் வாடிக்கையாளர்கள் போல் குறிப்பிட்ட கால்டாக்சி நிறுவன ஆப்பில் ‘பைக் டாக்சி’ கேட்டு பதிவு செய்தனர்.

    இதையடுத்து அண்ணா நகர், அண்ணா நகர் ரவுண்டானா, நியூ ஆவடி ரோடு ஆகிய இடங்களுக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட ‘பைக் டாக்சிகளை’ அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

    இதுதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, தமிழகத்தில் பைக் டாக்சியாக மோட்டார் சைக்கிளில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்ல அனுமதி கிடையாது இதில் விபத்து நடந்தால் இன்சூரன்சு பெற முடியாது என்றார். #tamilnews
    சென்னை, போரூர் அருகே அமைந்துள்ள தனியார் கார் பார்க்கிங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கு மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின. #PorurCallTaxiFire
    சென்னை:

    சென்னை, போரூர் அருகே தனியார் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மளமளவென தீ பிடித்தது. 

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கார்களில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். 



    கார்களில் பிடித்த தீ காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட புகையால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த தீவிபத்தில் சுமார் 214 கார்கள் எரிந்து நாசமாகின.

    ஏற்கனவே, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சி கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. #PorurCallTaxiFire
    ×